Categories: AR Rahman

Aathangara Marame Song Lyrics from Kizhakku Cheemayile | Aathangara Marame பாடல் வரிகள் in tamil

Aathangara Marame Song Lyrics In Tamil

Aathangara Marame Song Lyrics song is from the movie Kizhakku Cheemayile which was released in the year 1993 and it was sung by the singers Mano and Sujatha Mohan. The lyrics of this song Aathangara Marame Song Lyrics was written by Vairamuthu and music composed by A.R.Rahman. Vijayakumar, Radhika, and Napoleon have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Vijayakumar, Radhika, and Napoleon
திரைப்படம் : Kizhakku Cheemayile
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : Mano and Sujatha Mohan
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 1993
=================

அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே

பருவம் சுமந்துவரும் பாவாடை தாமரையே

தட்டாம் பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ

மூன்றாம் பிறையை நீ முழுநிலவானதேப்போ

மௌனத்தில் நீ இருந்தா யாரைத்தான் கேட்பதிப்போ

ஆத்தங்கர மரமே அரசமர இலையே

ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

ஆத்தங்கர மரமே அரசமர இலையே

ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

ஓடக்கர ஒழவு காட்டுல ஒருத்தி

யாரு இவ வெடுச்சு நிக்குற பருத்தி

தாவி வந்து சண்டையிடும் அந்த முகமா

தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா

உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது

அட ஓட தண்ணி உப்பு தண்ணி ஆகாது

ஆத்தங்கர மரமே அரசமர இலையே

ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

மாமனே உன்ன காணாம

வட்டியில் சோறும் உன்காம

பாவி நான் பருத்தி நாறா போனேனே

காகம்தான் கத்தி போனாலும்

கதவுதான் சத்தம் போட்டாலும்

உன்முகம் பாக்க ஓடி வந்தேனே

ஒத்தையில் ஒடக்கரையோரம்

கத்தியே உன் பேர் சொன்னேனே

ஒத்தையில் ஓடும் ரயில் ஓரம்

கத்தியே உன் பேர் சொன்னேனே

அந்த ரயில் தூரம் போனதும்

நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே

முத்து மாமா என்ன விட்டு போகாதே

என் ஒத்த உசுரு போனா மீண்டும் வராதே

ஆத்தங்கர மரமே அரசமர இலையே

ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

தாவணி பொன்னே சுகம்தானா

தங்கமே தழும்பும் சுகம்தானா

பாறையில் சின்ன பாதம் சுகம்தானா

தொட்ட பூ எல்லாம் சுகம்தானா

தொடாத பூவும் சுகம்தானா

தோப்புல ஜோடி மரங்கள் சுகம்தானா

ஐத்தையும் மாமனும் சுகம்தானா

ஆத்துல மீனும் சுகம்தானா

ஐத்தையும் மாமனும் சுகம்தானா

ஆத்துல மீனும் சுகம்தானா

அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளத்த

திண்ணையும் சுகம்தானா

மாமன் பொன்னே மச்சம் பார்த்து நாளாச்சு

உன் மச்சானுக்கு மயில பசுவு தோதாச்சு

ஆத்தங்கர மரமே அரசமர இலையே

ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

ஓடக்கர ஒழவு காட்டுல ஒருத்தி

யாரு இவ வெடுச்சு நிக்குற பருத்தி

தாவி வந்து சண்டையிடும் அந்த முகமா

தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா

உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது

அட ஓட தண்ணி உப்பு தண்ணி ஆகாது

ஆத்தங்கர மரமே அரசமர இலையே

ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

Aathangara Marame Video Song

Share

Recent Posts

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் | soundarya lahari tamil

இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…

1 week ago

ஆதித்ய ஹ்ருதயம் – 11-15 | aditya hrudayam stotram 11 15

இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

1 week ago

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா | onnam thiruppadi saranam pon ayyappa

இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…

4 weeks ago

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் | kotti muzhakkiduvom pambai

இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

4 weeks ago

விநாயகனே வினை தீர்ப்பவனே | vinayagane vinai theerpavane

இந்த ஆன்மீக பதிவில் (விநாயகனே வினை தீர்ப்பவனே) - விநாயகனே வினை தீர்ப்பவனே பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை படித்து…

4 weeks ago

கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல் | ganesha saranam saranam ganesha bhajanai

இந்த ஆன்மீக பதிவில் (கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல்) -  கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை…

4 weeks ago