இந்த ஆன்மீக பதிவில் (அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே) – Alai Payuthey Kanna En Manam Miga Alai Payuthey பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே (உன்) ஆனந்த மோகன வேணுகானம் அதில் (அலைபாயுதே) பாடல் வரிகள் – ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல். Alai Payuthey Kanna En Manam Miga Alai Payuthey

Un Anandha Mohana Venuganam Athil Song Lyrics by Othukadu Venkata subbaiyer.

============

அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே

(உன்) ஆனந்த மோகன வேணுகானம் அதில் (அலைபாயுதே)

நிலை பெயராது சிலை போலவே நின்று

நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா

என் மனம் (அலைபாயுதே)

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே

திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே

கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே

கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே

கதித்த மனத்தில் உருத்தி பதத்தை

எனக்கு அளித்து மகிழ்த்தவா

ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு

உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென

இணையிரு கழலெனக்-அளித்தவா

கதறி மனமுருகி நான் அழைக்கவோ

இதர மாதருடன் நீ களிக்கவோ

இது தகுமோ, இது முறையோ, இது தருமம் தானோ?

குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள்

போலவே மனது வேதனை மிகவொடு (அலைபாயுதே)

(alai payuthey kanna en manam) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள், Othukadu Venkata subbaiyer Songs, Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், Carnatic Songs. You can also save this post அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே or bookmark it. Share it with your friends…

Leave a Comment