இந்த ஆன்மீக பதிவில் (ஆலயம் என்றால் பெரிய பாளையம்!) – Alayam Endraal Alayam adhuthaan periyapalayam Song Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஆலயம் என்றால் பெரிய பாளையம்! ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஆலயம் என்றால் ஆலயம் அது தான் பெரிய பாளையம்!: சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அம்மன் பக்தி பாடல் வரிகள். குரல்: சீர்காழி கோவிந்தராஜன்

வரிகள்: கண்ணதாசன் . இசை: MSV. படம்: தேவி தரிசனம். Alayam Endraal Alayam adhuthaan periyapalayam, Sung By: Seerkazhi Govindarajan – Amman Devotional Song Lyrics Tamil.

============

ஆலயம் என்றால் ஆலயம்

அது தான் பெரிய பாளையம்!

காலம் வழங்கும் துன்பத்தையெல்லாம்

கனவாய் மாற்றும் ஆலயம்!

(ஆலயம் என்றால் ஆலயம்)

சாலை வழியே தனியே சென்றால்

தானும் வருவாள் பவானியே!

தாயே சரணம் என்று விழுந்தால்

தன் கை கொடுப்பாள் பவானியே!

காலையில் மஞ்சள் நீரில் முழுகி

காரிகை மார்கள் கூடுகின்றார்

கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே

காளியின் பெருமை பாடுகின்றார்

காளி திரிசூலி…

நீலி ஜகன்மாதா…

தேவி பராசக்தி…

ஓங்காரி பவானி…

(ஆலயம் என்றால் ஆலயம்)

தாலியைக் காட்டி வேலியை நினைந்து

தன்னை மறந்தே ஆடுகின்றார்!

தர்மம் என்பதைக் காணாதவர்கள்

சந்நிதி முழுதும் தேடுகின்றார்!

பாளையத்தம்மா இருப்பதை மறந்து

பாவிகள் எல்லாம் ஆடுகின்றார்!

பட்டப் பகலில் கண்களை இழந்து

பாதையை மாற்றி ஓடுகின்றார்!

தவறு நடந்தால் பாளையத்தம்மா

சக்தியை அங்கே காட்டுகின்றாள்!

தர்மம் வெல்லும் என்பதைச் சொல்லித்

தாயின் பெருமையை நாட்டுகின்றாள்!

(ஆலயம் என்றால் ஆலயம்)

(alayam endraal alayam adhuthaan periyapalayam) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs. You can also save this post ஆலயம் என்றால் பெரிய பாளையம்! or bookmark it. Share it with your friends…

Leave a Comment