இந்த ஆன்மீக பதிவில் (அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!) – Ammavum Neeye Appavum Neeye பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே! ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே! அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே! களத்தூர் கண்ணம்மா முருகன் பாடல் வரிகள். இசை: ஆர்.சுதர்சனம்

குரல்: எம்.எஸ்.ராஜேஸ்வரி . Ammavum Neeye Appavum Neeye Anbudane atharikkum deivamum neeye – Murugan Devotional Song lyrics from Kalathur Kannamma Tamil Movie.

============

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!

அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!

(அம்மாவும் நீயே!)

தந்தை முகம், தாயின் முகம், கண்டறியோமே!

மனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே!

எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?

இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

முருகா முருகா முருகா முருகா

(அம்மாவும் நீயே!)

பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே

பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே!

ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே

இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

முருகா முருகா முருகா முருகா

(அம்மாவும் நீயே!)

(ammavum neeye appavum neeye) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs. You can also save this post அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே! or bookmark it. Share it with your friends…

Leave a Comment