இந்த ஆன்மீக பதிவில் (செல்லாத்தா செல்ல மாரியாத்தா) – Chellatha Chella Mariatha Enkal Sinthayil vanthu arai vinadi Nillatha பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… செல்லாத்தா செல்ல மாரியாத்தா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா : L.R. ஈஸ்வரி பாடிய அம்மன் பக்தி பாடல் வரிகள். Chellatha Chella Mariatha Enkal Sinthayil vanthu arai vinadi Nillatha- LR Iswari Amman Devotional songs Tamil Lyrics

============

செல்லாத்தா செல்ல மாரியாத்தா

எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா

கண்ணாத்தா உன்னைக் காணாட்டா

இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா

உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா

இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா (செல்லாத்தா)

தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு

தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா

நீ இளநீரை எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு

வளமான வாழ்வு கொடு மாரியாத்தா – நல்ல

வழி தன்னையே காட்டிவிடு மாரியாத்தா (செல்லாத்தா)

பசும்பாலைக் கறந்துகிட்டு கறந்தபால எடுத்துகிட்டு

புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா

நீ பாம்பாக மாறி அதைப் பாங்காகக் குடித்துவிட்டு

தானாக ஆடிவா நீ மாரியாத்தா

உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா

இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா (செல்லாத்தா)

ஆதி சக்தி மாதா, கருமாரி மாதா – எங்கள்

ஆதி சக்தி மாதா, கருமாரி மாதா!

(chellatha chella mariatha) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs. You can also save this post செல்லாத்தா செல்ல மாரியாத்தா or bookmark it. Share it with your friends…

Leave a Comment