இந்த ஆன்மீக பதிவில் (ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை) – Jeevan Enbathu Ullavarai En Nenjam vanangum Sabarimalai song lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை ஐயப்பன் பாடல் வரிகள். Jeevan Enbathu Ullavarai En Nenjam vanangum Sabarimalai- K. Veeramani Ayyappa song Tamil Lyrics

ஜீவன் என்பது உள்ளவரை என்

நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை

அரிகரன் புகழை பாடும் வரை

வாழ்வினில் தோன்றும் சாந்தமலை

(ஜீவன்)

கார்த்திகை தோறும் மாலை அணிந்து

நாற்பது நாளும் நோன்பும் இருந்து

நாவில் ஐயன் நாமம் பொழிந்து

நடந்தே சென்று கோவிலடைந்து

இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில்

கோடி மணி தந்தான் என்னிடத்தில்

(ஜீவன்)

நெய் விள‌க்காலே அலங்காரம்

சரணம் என்னும் ஓம்காரம்

சர்வமும் அதிலே ரீங்காரம்

ஆசையில் மோதும் அலையாவும்

ஜோதியைக் கண்டால் தெளிவாகும் – மகர‌

ஜோதியைக் கண்டால் தெளிவாகும்

(ஜீவன்)

பம்பைக் கரையில் அவதரித்தான்

பந்தள‌ நாட்டில் பணி முடித்தான்

மகிஷியை வென்றே வாழ்வளித்தான்

மழலை வடிவில் அருள் கொடுத்தான்

அன்னையின் நோய்க்கும் மருந்தளித்தான்

அகிலம் வாழவும் துணை இருப்பான் இந்த‌

அகிலமும் வாழவும் துணை இருப்பான் (ஜீவன்)

(jeevan enpathu ullavarai nenjam vanangum sabari) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள். You can also save this post ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை or bookmark it. Share it with your friends…

Leave a Comment