இந்த ஆன்மீக பதிவில் (காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது) – Title : காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது! சீர்காழி முருகன் பாடல் வரிகள். Kaalai Ilam kathiril Unthan Katchi Sung By Sirkazhi Govindarajan – Murugan Devotional Song lyrics

============

காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது

கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது!

(காலை இளம் கதிரில்)

கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது

கலையாதது நிலை ஆகுது கதி ஆகுது!

(காலை இளம் கதிரில்)

(முதல்)

மாலை வெயில் மஞ்சளிலே உன் மேனி மின்னுது – அந்தக்

கோலம் கண்டு உள்ளம் கொள்ளை உறுதி கொள்ளுது

குமரா உனை மனம் நாடுது; கூத்தாடுது!

(காலை இளம் கதிரில்)

சோலை மலர்க் கூட்டம் உந்தன் தோற்றம் கொள்ளுது – சிவ

சுப்பிரமண்யம் சுப்பிரமண்யம் என்று சொல்லுது

சுகம் ஆகுது! குக நாமமே! சொல் ஆகுது!!

(காலை இளம் கதிரில்)

வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரம் ஆகுது

“வெற்றி வேல், சக்தி வேலா” என்றே சேவல் கூவுது

“சக்தி வேல் சக்தி வேல்” என்றே சேவல் கூவுது

வினை ஓடுது! வடி வேல் அது, துணையாகுது!!

(காலை இளம் கதிரில்)

பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே

நான் பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே

உருவாகுது திருவாகுது

குருநாதனே முருகா …

(காலை இளம் கதிரில்)

(kaalai Ilam kathiril unthan katchi) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, Sirkazhi Govindarajan songs. You can also save this post காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது or bookmark it. Share it with your friends…

Leave a Comment