இந்த ஆன்மீக பதிவில் (காலமெல்லாம் காத்திருந்தாலும் காணக் கிடைக்காதவள் கருமாரி) – Kaalamellam Kathirunthaalum Kaana kidaikathaval பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… காலமெல்லாம் காத்திருந்தாலும் காணக் கிடைக்காதவள் கருமாரி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

காலமெல்லாம் காத்திருந்தாலும் காணக் கிடைக்காதவள் கருமாரி | Kaalamellam Kathirunthaalum Kaana kidaikathaval Amman Devotional songs Tamil Lyrics

காலமெல்லாம் காத்திருந்தாலும்

காணக் கிடைக்காதவள் கருமாரி

கனிந்துருகி உள்ளம் கொதித்தவர்க்கு

கணத்திலே காட்சி தந்திடுவாள் தேவி கருமாரி

காலமெனும் தேரிலேறி கருமாரி நீ வருகையிலே

காணக் கண் கூசுதம்மா கோடி ஜோதி தெரியுதம்மா

பூரண நிலவினிலே பொன்மேனி ஒளி விடவே

புற்றினிலே தோன்றுவாள் எங்கள் கருமாரியம்மா

புண்பட்ட மனதிலெல்லாம் பூரணமாய் நிறைந்திடவே

பொங்கிடும் செல்வமெல்லாம் பூரணமாய் நிறைந்திடவே

கருநாகமாய் வந்திடுவாள் கைகுவித்த பேருக்கு

காட்சியும் கொடுத்திடுவாள் எங்கள் கருமாரியம்மா

திரிசூலம் ஏந்திடுவாள் திருநீறு அணிந்திடுவாள் (திரி)

தீராத நோயெல்லாம் தீர்த்திடுவாள் கருமாரி

சரவிளக்கு சுடர்விடவே

சாற்றிய மாலையெல்லாம் உருமறைக்க

கற்பூரம் காட்டியே கை தொழுதால்

கண் திறந்து பார்த்திடுவாள் எங்கள் கருமாரி

கிணிமணி கிலுகிலுக்க கால் சலங்கை சலசலக்க

உடலெங்கும் சிலுசிலுக்க உன் சிரிப்பொலி கேட்குதம்மா

எங்கள் சிந்தையும் குளிருதம்மா (திரி)

கருணை உள்ளம் கொண்டவளே எங்கள் கருமாரி

கண்ணாயிரம் கொண்டவளே எங்கள் கருமாரி

பொன்னாபரணம் பூண்டவளே எங்கள் கருமாரி

பண்ணாயிரம் பாட வந்தோம் எங்கள் கருமாரி

(kaalamellam kathirunthaalum kaana kidaikathaval) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs. You can also save this post காலமெல்லாம் காத்திருந்தாலும் காணக் கிடைக்காதவள் கருமாரி or bookmark it. Share it with your friends…

Leave a Comment