இந்த ஆன்மீக பதிவில் (கண்டத்தில் நஞ்சினை சுமந்ததினால் திருநீலகண்டனானான்) – Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கண்டத்தில் நஞ்சினை சுமந்ததினால் திருநீலகண்டனானான் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கண்டத்தில் நஞ்சினை சுமந்ததினால் திருநீலகண்டனானான் பாடல் வரிகள். Kandaththil Nanjinai sumanthathinaal thiru Neelakandan K.J.Yesudhas Ayyappa song Tamil Lyrics

கண்டத்தில் நஞ்சினை சுமந்ததினால் திருநீலகண்டனானான்

ஐயன் கண்டத்தில் மணியினை சுமந்ததினால்

மணிகண்ட‌ சுவாமி ஆனான்

பிண்டத்தில் பாதியை உமையிடம் தந்து அர்த்த‌ நாரியானான்

அந்த‌ ஹரனவன் ஹரியுடன் கலந்ததினாலே ஹரிஹரசுதனானான்

இருமுடி ஏற்று ஏற்று சிரத்தினில் ஏற்று

ஐயனை நெஞ்சில் போற்று போற்று கரம் குவிந்து போற்று

நாளும் கரம் குவித்து போற்று (கண்டத்தில்)

சன்னதி நோக்கி பக்தர்கள் கூட்டம் புறப்படும் திசை எட்டு

அந்த‌ பக்த்ர் கூட்டமும் கூடுவதோ உன் பதினெட்டு படிகட்டு

தவத்திரு பதினெட்டு பதினெட்டு படிக்கட்டு

ஏறுகிறேன் படி ஏறுகிறேன் ஐயன்

உனை நான் காணுகிறேன் காணுகிறேன்

எனது மனம் உனது உடல் பொருளும் உனது

ஐம்பிலனும் உனது ஐயா

அகிலம் உனது அதன் உயிரினங்கள் உனது

பிறவியும் உனது ஐயா

பசியினைப் போக்கிட‌ பசுவினை நோக்கி கன்று வருவதியல்பு

மனப்பசியுள்ள‌ மனிதன் ஐயனைக் காண‌ அருள்வதும் அவனியல்பு

அருள்வதும் ஐயம் அவனியல்பு

முடிவெடுப்போம் இருமுடியெடுப்போம்

முடிவனே என‌ உணர்ந்தெடுப்போம் உணர்ந்தெடுப்போம்

வழிகள் பல‌ நடந்து பம்பை நதி கடந்து

சபரிமலை அடையும் பக்தரே

வீண் ஆசைகளைத் துறந்து ஐயன்வசம் பணிந்து

முக்தியை நாமும் பெருவோமே(கண்டத்தில்)

‘பத்மஸ்ரீ’ கே. ஜே. ஜேசுதாஸ் பாடிய‌ ‘கண்டத்தில் நஞ்சினை சுமந்ததினால் திருநீலகண்டனானான்’ ஐயப்பன் பாடலின் வரிகள்.

(kandaththil nanjinai sumanthathinaal) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள். You can also save this post கண்டத்தில் நஞ்சினை சுமந்ததினால் திருநீலகண்டனானான் or bookmark it. Share it with your friends…

Leave a Comment