இந்த ஆன்மீக பதிவில் (கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்) – Kondai mudi alangarithu song lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா! தேவி பாடல் வரிகள். பாடல் : வீரமணி ஐயர் , குரல்: TM சௌந்தரராஜன். Karpagavalli Nin Porpadhangal by T.M. Soundararajan / Devi Songs Tamil Lyrics

============

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாய் அம்மா!(கற்பக வல்லி)

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்

சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட

(கற்பக வல்லி)

நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்

நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ

ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள

ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா!

(கற்பக வல்லி)

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்

நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய

கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த

உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!

(கற்பக வல்லி)

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்

வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்

பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த

லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா!

(கற்பக வல்லி)

அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்

கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் – அருள்

தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்

ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா!

(கற்பக வல்லி)

(karpagavalli nin porpadhangal) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Ambal Songs, அம்பாள் பாடல்கள், Navarathri Special Tamil Songs Lyrics. You can also save this post கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் or bookmark it. Share it with your friends…

Leave a Comment