இந்த ஆன்மீக பதிவில் (மாயி மகமாயி, மணி மந்திர சேகரியே! ஆதி பராசக்தி) – Maayee maghamaayee mani manthira Sehariye பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… மாயி மகமாயி, மணி மந்திர சேகரியே! ஆதி பராசக்தி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஆயி மகமாயி.. ஆயிரம் கண்ணுடையாள்

நீலி திரிசூலி.. நீங்காத பொட்டுடையாள்

சமயபுரத்தாளே.. சாம்பிராணி வாசகியே

சமயபுரத்தை விட்டுச் சடுதியிலே வாருமம்மா..

============

மாயி மகமாயி, மணி மந்திர சேகரியே

எங்க ஆயி உமையானவளே, ஆத்தா.. என் மாரிமுத்தே

(மாயி)

சிலம்பு பிறந்ததம்மா, சிவலிங்கச் சாலையிலே

பிரம்பு பிறந்ததம்மா, பிச்சாண்டி சன்னிதியில்

உடுக்கை பிறந்ததம்மா, உருத்திராட்ச பூமியிலே

பம்பை பிறந்ததம்மா, பளிங்குமா மண்டபத்தில்

(மாயி)

பரிகாசம் செய்தவரைப் பதைபதைக்க வெட்டிடுவே

பரிகாரம் கேட்டுவிட்டா, பக்கத்துணை நீ இருப்பே

மேனாட்டுப் பிள்ளையிடம், நீ போட்ட முத்திரையை

நீ பார்த்து மாத்தி வச்சா, நாள் பார்த்து பூசை செய்வான்

(மாயி)

குழந்தை வருந்துவது, கோவிலுக்குக் கேட்கலையோ?

மைந்தன் வருந்துவது, மாளிகைக்குக் கேட்கலையோ?

ஏழைக் குழந்தையம்மா.. எடுத்தோர்க்குப் பாலனம்மா

உன் தாளைப் பணிந்து விட்டால், தயவுடனே காருமம்மா!

கத்தி போல் வேப்பிலையாம்.. காளியம்மன் மருத்துவராம்

ஈட்டி போல் வேப்பிலையாம்.. ஈஸ்வரியின் அருமருந்தாம்

வேப்பிலையில் உள்ளிருக்கும்.. விந்தைதனை யார் அறிவார்

ஆயா மனமிரங்கு – என் ஆத்தா மனமிரங்கு

அன்னையே நீ இரங்கு என் அம்மையே நீ இறங்கு!

(maayee maghamaayee mani manthira sehariye) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, மாரியம்மன் பாடல்கள், Mariamman Bhakti Padalgal. You can also save this post மாயி மகமாயி, மணி மந்திர சேகரியே! ஆதி பராசக்தி or bookmark it. Share it with your friends…

Leave a Comment