இந்த ஆன்மீக பதிவில் (மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து) – Mannukkum Vinnukkum Naduvirundhu பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து முருகன் பாடல் வரிகள். Mannukkum Vinnukkum Naduvirundhu – TM Soundarrajan – Murugan Devotional Song lyrics

============

மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து

மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து

கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்

கந்தனே நீ ஒரு கற்கண்டு! (2)

குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ

குளிர்வீசி வரும்தென்றல் இசைநீயன்றோ

மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ (2)

என் மனக்கோயில் ஒளியேற்றும் ஒளி நீயன்றோ

(மண்ணுக்கும் விண்ணுக்கும்)

பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ

பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ

பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ (2)

தமிழ்ப் பாட்டுக்குப் பொருளாகும் பொருள் நீயன்றோ

(மண்ணுக்கும் விண்ணுக்கும்)

(mannukkum vinnukkum naduvirundhu) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, T. M. Soundararajan, டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல். You can also save this post மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து or bookmark it. Share it with your friends…

Leave a Comment