இந்த ஆன்மீக பதிவில் (முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு) – Title : முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே! முருகன் பாடல் வரிகள்.Muruganai Koopittu Murayitta Perukku – TM Soundarrajan – Murugan Devotional Song lyrics

============

முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு

முற்றிய வினை தீருமே!

உடல் பற்றிய பிணி ஆறுமே!

வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற

மெத்த இன்பம் சேருமே!!

(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)

குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு

குறைகள் யாவும் போகுமே!

அவர் குடும்பம் தழைத் தோங்குமே!

சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால்

சகல பயம் நீங்குமே!!

(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)

அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்

அருகில் ஓடி வருவான்!

அன்பு பெருகி அருள் புரிவான்!

அந்தக் கருணை உருவான குருபரன்

என்றுமே கைவிடாமல் ஆளுவான்!!

(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு

காரியம் கைகூடுமே!

பகை மாறி உறவாடுமே!

சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி

மேன்மை உயர்வாகுமே!!

(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)

ஐயன் முருகனைக் கூப்பிட்டு…

ஐயன் முருகனைக் கூப்பிட்டு…

என் ஐயா…என் ஐயா…

(muruganai koopittu murayitta perukku) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, T. M. Soundararajan, டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல். You can also save this post முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு or bookmark it. Share it with your friends…

Leave a Comment