இந்த ஆன்மீக பதிவில் (ஓராறு முகமும் ஈராறு கரமும்) – Oraru Mugamum Eeraru Karamum பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஓராறு முகமும் ஈராறு கரமும் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும் முருகன் பாடல் வரிகள். T.M.சௌந்தரராஜன் முருகன் பக்திப் பாடல். Oraru Mugamum Eeraru Karamum Theeraadha Vinaithannaith Theerkkum – Murugan Devotional Song lyrics TM Soundarrajan Songs.

============

ஓராறு முகமும் ஈராறு கரமும்

தீராத வினைதன்னைத் தீர்க்கும் – துன்பம்

வாராத நிலைதன்னைச் சேர்க்கும் – ஐயன் (ஓராறு)

ஆராவமுதென அருள்மழை பெய்யும்

கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும் (ஓராறு)

சுவாமி மலையில் சிவகுருவென்று திரு

சீரலைவாயிலில் சூரனை வென்று

தேமதுர மொழியாள் தேவானையை மணந்து

திருப்பரங்குன்றினில் தரிசனம் தந்த – அந்த (ஓராறு)

மாமனைப்போல் இரு மாதுடன் கூடி

மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி

மாமயிலேறிட திருத்தணியைத் தேடி

மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்த (ஓராறு)

(oraru mugamum eeraru karamum) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல், பாடல் வரிகள், Murugan songs. You can also save this post ஓராறு முகமும் ஈராறு கரமும் or bookmark it. Share it with your friends…

Leave a Comment