இந்த ஆன்மீக பதிவில் (பால்வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்) – Paal Vadiyum Mugam Ninaindhu ninaindhen Ullam பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… பால்வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

பால்வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பரவச மிக வாகுதே பாடல் வரிகள். Paal Vadiyum Mugam Ninaindhu ninaindhen Ullam Paravasam Migavaaguthey Kanna – Krishna Songs by Othukadu Venkatasubbaiyer song Lyrics

============

பல்லவி

பால்வடியும் முகம்

நினைந்து நினைந்தென் உள்ளம்

பரவச மிக வாகுதே (கண்ணா)

அனுபல்லவி

நீலக்கடல் போலும் நிறத்தழகா -கண்ணா

எந்தன் நெஞ்சம் குடி கொண்டு

அன்று முதல் இன்றும்

எந்த பொருள் கண்டும்

சிந்தனை செல்லாதொழிய (பால்வடியும்)

சரணம்

வான முகட்டில் சட்று

மனம் வந்து நோக்கினும்

(உன்) மோன முகம் வந்து தோனுதே

தெளிவான தண்ணீர் தடத்தில்

சிந்தனை மாறினும்

(உன்) சிரித்த முகம் வந்து காணுதே

கானக் குயில் குரலில்

கருத்(து) அமைந்திடினும் (அங்கு)

உன் கான குழலோசை மயக்குதே

கருத்த குழலொடு நிறுத்த மயிலிற-

கிறுக்கி அமைத்த திறத்திலே

கான மயிலாடும் மோனக்குயில் பாடும்

நீல நதியோடும் வனத்திலே

குழல் முதல் எழிலிசை குழைய வரும் இசையில்

குழலொடு மிளிர் இளங் கரத்திலே

கதிரும் மதியும் என நயன விழிகள் இரு

நளினமான சலனத்திலே

காளிங்கன் சிரத்திலே

கதித்த பதத்திலே

என் மனத்தை இருத்திக்

கனவு நினைவினோடு

பிறவி பிறவி தோறும்

கனிந்துருக வரம் தருக பரம் கருணை (பால்வடியும்)

(paal vadiyum mugam ninaindhu ninaindhen ullam) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள், Othukadu Venkata subbaiyer Songs, Carnatic Songs. You can also save this post பால்வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment