இந்த ஆன்மீக பதிவில் (பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு) – Title : Pillaiyar Suzhi Pottu seyal Thodangu Lyrics Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு – பிள்ளையார்

சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு

அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து

அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து – பிள்ளையார்

சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு

அழியாத பெருஞ்செல்வம் அவனே

தில்லை ஆனந்த கூத்தனின் மகனே

தில்லை ஆனந்த கூத்தனின் மகனே – பிள்ளையார்

சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு

வழியின்றி வேலனவன் திகைத்தான்

குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்

வழியின்றி வேலனவன் திகைத்தான்

குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்

மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்

மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்

மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்

மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான் – பிள்ளையார்

சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு

கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை

அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை

ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்

அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்

அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும் – பிள்ளையார்

சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு

தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்

வரும் துயர் யாவையும் முன் நின்று தடுக்கும்

அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும்

அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும் – பிள்ளையார்

சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு

‘பத்மஸ்ரீ’ சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய‌ ‘பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு’ கணபதி பாடலின் வரிகள். Padmashri Seergazhi Dr. Govindarajan’s songs.

(pillaiyar suli pottu tamil songs lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Sree Ganesha Songs, கண‌பதி பாடல்கள். You can also save this post பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு or bookmark it. Share it with your friends…

Leave a Comment