இந்த ஆன்மீக பதிவில் (சொன்னதைக் கேள் கண்ணா) – Sonnathai Kel Kanna Song Tamil Lyrics by Othukadu Venkata subbaiyer பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சொன்னதைக் கேள் கண்ணா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

சொன்னதைக் கேள் கண்ணா பாடல் வரிகள் – ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல். Sonnadaik Kel Kanna Song Tamil Lyrics by Othukadu Venkata subbaiyer.

இயற்றியவர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்

பல்லவி

சொன்னதைக் கேள் கண்ணா தோம் தகிட திரி தாக

தன தோமென அரவ படமாடும் அய்யா

அனுபல்லவி

தின்னவும் வெண்ணையும் செல்வமும் தானிருக்க செல்வமும் சீரும் (மிக)

அன்னை நானிருக்க புன்னகையும் நன்னகையும் காட்டி போதாதென ஒரு குழலிசைக் கூட்டி

இன்னவென அறியா உளம் மீட்டி எங்கனும் நிறைவாய் இறைவா

சரணம்

அல்லை அயல்மனை சென்று களவாடும்

தொல்லை வழக்குக்கு நீ போகாதே அவர் சொல்ல வந்தக்-கோளுரைகள்

இல்லை என்று சொல்வது தூயவன் நீ உனக்கது ஆகாதே

புல்லைக்-கடை தாங்கி மெல்ல அசை போடும் பொன்னான பசுமந்தை நீங்காதே கண்ணாஎல்லை வனம் தாண்டிப்-போகாதே போனால் இருளாகும் போது தங்கலாகாதே சொன்ன

சொல்லை மீறும் எந்தன் பிள்ளை என்று சொல்லத் தோணும் படி நடவாதே சொன்ன சொல்லை தடவாதே

(sonnathai kel kanna) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள், Othukadu Venkata subbaiyer Songs, Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், Carnatic Songs. You can also save this post சொன்னதைக் கேள் கண்ணா or bookmark it. Share it with your friends…

Leave a Comment