இந்த ஆன்மீக பதிவில் (ஸ்ரீ சக்ரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி பக்தி துதி) – Sri Chakram Thannil Amarndha Rajeswari lyrics Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஸ்ரீ சக்ரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி பக்தி துதி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஸ்ரீ சக்ரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி

சின்மயானந்த சிவ மனோகரி

சிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள் – எங்கள்

சிந்தையிலே வந்து கலந்து இருந்தாள். (ஸ்ரீ).

அலைமகள் கலைமகள் கீதம்பாட நந்திகேஸ்வரரும் தாளம் போட

ரம்பை ஊர்வசியும் நர்தனமாட

அந்தணர் நான்மறை வேதங்கள் ஓத

தேவி ராஜராஜேஸ்வரி கொலு இருந்தாள். (ஸ்ரீ).

சிம்ம வாகனத்தில் வீற்றிருக்க

செங்கரத்தில் கரும்புவில்லும் தாங்கி இருக்க

ரத்ன மாலைகளும் பளபளக்க – நவரத்ன

சிம்மாசனத்தில் கொலு இருந்தாள்

தேவி ராஜராஜேஸ்வரி கொலு இருந்தாள். (ஸ்ரீ).

திருமால் சிவனும் நான்முகனும் ஆறுமுகனுடன் கணபதியும்

தும்புறு நாரதர் உடன்கூட

முப்பத்து முக்கோடி தேவர் வணங்க

தேவி ராஜராஜேஸ்வரி கொலு இருந்தாள். (ஸ்ரீ).

(sri chakram thannil amarndha rajeswari lyrics tamil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, ஸ்ரீ ராஜேஸ்வரி அம்மன், Sri Rajeswari Amman Songs. You can also save this post ஸ்ரீ சக்ரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி பக்தி துதி or bookmark it. Share it with your friends…

Leave a Comment