இந்த ஆன்மீக பதிவில் (திருத்தணி மலையினிலே திருநாளாம்) – திருத்தணி மலையினிலே திருநாளாம் பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… திருத்தணி மலையினிலே திருநாளாம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

திருத்தணி மலையினிலே திருநாளாம் திருப்புகழ் பாடிடும் பெருநாளாம் -‘பத்மஸ்ரீ’ யேசுதாஸ் பாடிய முருகன் பாடல் வரிகள். Thiruthani malaiyinile thirunaalam thirupugazh paadidum perunalam song lyrics by K J Yesudas Songs – Lord Murugan Devotional songs Tamil Lyrics

============

திருத்தணி மலையினிலே திருநாளாம்

திருப்புகழ் பாடிடும் பெருநாளாம்

திருப்படி உற்சவம் சிவன்மகன் பொற்பதம்

தேரினில் வலம்வரவே அற்புதம் (தித்தணி)

ஆடிமாதக் கார்த்திகையில் அன்பரெல்லாம் தேடிவந்து

பாடியே படிகளிலே பக்திசுவைப் பெருக்கிடுவார்

சரவணன் பொய்கை தனில் அழகிய முருகனுமே

திருவிழா நாளினிலே தெப்பத்தில் வலம்வருவான்

காவடிகள் ஆடிவந்து கந்தனின் திருவடியை

நாடியவர் வேண்டியதை தந்து மகிழ்வான் (திருத்தணி)

தைப்பூசத் திருநாளில் கொட்டுமேளம் முழங்கிடவே

கூட்டம் மாலையுடன் கோடிகோடி மாந்தர்வர

தணிகையில் அமர்ந்திருந்து தரணியில் நலம் விளங்க

கனிவுடன் வேண்டியதை கந்தனும் அருளிடுவான்

சித்திரையின் பௌர்ணமியில் முழுமதி வானில்லவர

சாந்தமுடன் முருகனும் காட்சிதருவான் (திருத்தணி)

(thiruthani malaiyinile thirunaalam) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், K. J. Yesudas, Murugan songs. You can also save this post திருத்தணி மலையினிலே திருநாளாம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment