இந்த ஆன்மீக பதிவில் (துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்) – Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் ஐயப்பன் பாடல் வரிகள். Thulasimani Maalai aninthu Sabarimalai sentriduvom – K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்

தூயவனாம் ஐயப்பனின் தரிசனமே கண்டிடுவோம் (துளசிமணி மாலை)

பனிமலையின் உச்சியிலே பதினெட்டாம் படிதனிலே

பரிவுடன் அமைந்திருக்கும் சாஸ்தாவே சரணம் என்று (துளசிமணி மாலை)

சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்து

சதா அவன் நினைவில் மனமகிழ்ந்து

கணாதிபன் அந்த‌ விநாயகன் தம்பி

குணகரனை அனுதினம் நினைந்து

இணைபடியே நம்பி வந்து ஐயன் இதயத்திலே நாம் கலந்து

பணிந்து மகிழ்ந்து கனிந்து விரதமிருந்து இருமுடி சுமந்து

குருவடிவானவன் கருணையை அறிந்து

திருவருள் நிறைந்திடும் சன்னதி வந்திடவே (துளசிமணி மாலை)

பவள‌ மணித் திருமார்பினிலே பந்தளராஜனின் ஆபரணம்

அவனியெல்லாம் போற்றிடவே அந்த‌ மணிகண்ட‌ குமரனின் அலங்காரம்

பலவினைகள் நீங்கிடவே பகவான் நாமம் பாடிடுவோம்

நம் கவலையெல்லாம் மறந்திடவே கருணை மழையில் கூடிடுவோம் (துளசிமணி மாலை)

(thulasimani maalai aninthu sabarimalai) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள். You can also save this post துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment