இந்த ஆன்மீக பதிவில் (கருப்பர் வாரார் : வாராரய்யா வாராரு கருப்பரிங்கே) – Vaaraaraiyaa Vaaraaru Karuppanna Swamy thuthi padal lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கருப்பர் வாரார் : வாராரய்யா வாராரு கருப்பரிங்கே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

கருப்பர் வாரார்

வாராரய்யா வாராரு கருப்பரிங்கே வாராரு

வாராரய்யா வாராரு கருப்பரிங்கே வாராரு

அள்ளி முடிச்ச கொண்டயப்பா

அழகு மீசை துள்ளுதப்பா

வெள்ள வேட்டிப்பட்டுடனே

வாரார் ஐயா ராசாப்போல. (வா).

ஆளுயர அரிவாளாம்

அதுக்கேத்த கம்பீரமாம்

காலிலே முள்ளுச்செருப்பாம்

கருப்பனுக்கே தனிச்சிறப்பாம். (வா).

வீச்சரிவாள் கையிலுண்டு

வேகமான குதிரையுண்டு

சுற்றிவரும் பகையழிக்கச்

சுக்கு மாந்தடியுமுண்டு. (வா).

இடுப்பிலே சலங்கையுண்டு

இடிமுழக்கச் சிரிப்புமுண்டு

வாக்கிலே வலிமையுண்டு

வற்றாத வலிமையுண்டு. (வா).

கையிலே சவுக்குமுண்டு

கனகமணிச் சலங்கையுண்டு

பாற்கடலில் பள்ளிகொண்ட

பரந்தாமன் நாமமுண்டு. (வா).

சந்தனமுண்டு ஜவ்வாதுண்டு

சாம்பிராணி வாசமுண்டு

சம்பங்கி ரோஜா முல்லை

மணக்குதப்பா இங்கே இப்போ. (வா).

(vaaraaraiyaa vaaraaru karuppanna swamy thuthi padal lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like கருப்பசாமி பாடல்கள், Karuppasamy Songs, பாடல் வரிகள். You can also save this post கருப்பர் வாரார் : வாராரய்யா வாராரு கருப்பரிங்கே or bookmark it. Share it with your friends…

Leave a Comment