இந்த ஆன்மீக பதிவில் (வைகறைப் பொழுதில் விழித்தேன்) – Vaigarai pozhuthil vizhithein – P Suseela Songs பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… வைகறைப் பொழுதில் விழித்தேன் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

வைகறைப் பொழுதில் விழித்தேன் – அந்த வடிவேல் முருகனை நினைத்தேன் பாடல் வரிகள். பி.சுசீலா பாடிய‌ முருகன் பக்திப் பாடல். Vaigarai pozhuthil vizhithein – P Suseela Songs – Murugan Devotional Song lyrics.

============

வைகறைப் பொழுதில் விழித்தேன் – அந்த

வடிவேல் முருகனை நினைத்தேன்

நெஞ்சத்தை மலராய்த் தொடுத்தேன் – அவன்

நினைவில் காலத்தைக் கழித்தேன்!

(வைகறைப் பொழுதில்)

திருப்புகழ்த் தேரில் இழுத்தேன் – அதை

தினமும் மனத்தால் சுவைத்தேன் – என்

தேவைகள் யாவையும் உரைத்தேன் – அவன்

திருவருள் தந்தான் களித்தேன்!

(வைகறைப் பொழுதில்)

உள்ளத்தில் கோயிலை அமைத்தேன் – பக்தி

உணர்வில் ராகத்தை வளர்த்தேன்

ஓம் எனும் மந்தரம் படித்தேன் – அவன்

கருணையைப் பொழிந்தேன் மகிழ்ந்தேன்!

(வைகறைப் பொழுதில்)

சூடிடும் குறிஞ்சி மலராவான் – அவன்

ஏந்திடும் தீபத்தின் ஒளியாவான் – மெய்

அருள் வரும் ஞானக் களியாவான் – என்றும்

அவனே வாழ்வுக்கே உயிராவான்!

(வைகறைப் பொழுதில்)

(vaigarai pozhuthil vizhithein) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, Murugan Bajanai Padalgal. You can also save this post வைகறைப் பொழுதில் விழித்தேன் or bookmark it. Share it with your friends…

Leave a Comment