இந்த ஆன்மீக பதிவில் (வேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து வழிகாட்ட) – Vel vanthu vinai theerka mayil vanthu vazhi kaatta Songs பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… வேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து வழிகாட்ட ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

வேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து வழிகாட்ட முருகன் பாடல் வரிகள். கவிஞர்.திரு. உளுந்தூர்பேட்டை சண்முகம் இசை: திரு.வைத்தியநாதன்

பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள். Vel vanthu vinai theerka mayil vanthu vazhi kaatta Songs – Murugan Devotional Song lyrics.

============

வேல்வந்து வினைதீர்க்க

மயில்வந்து வழிகாட்ட

கோயிலுக்குள் சென்றேனடி – குமரன்

கொலுவிருக்கக் கண்டேனடி

(வேல்வந்து)

பால்கொண்டு நீராட்டி

பழம்தந்து பாராட்டி

பூமாலை போட்டேனடி

திருப்புகழ்மாலை கேட்டேனடி

பங்குனியின் உத்திரத்தில்

பழனிமலை உச்சியினில் – கந்தன்

எனைக் கண்டானடி

சிந்தையில் நின்றானடி

வேலழகும் மயிலழகும்

வீற்றிருக்கும் பேரழகும்

காலமெல்லாம் இருக்குமடி – அந்தக்

காட்சியென்றும் இனிக்குமடி!

(வேல்வந்து)

(vel vanthu vinai theerka) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, Sulamangalam Sisters Songs. You can also save this post வேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து வழிகாட்ட or bookmark it. Share it with your friends…

Leave a Comment