Ezhaigalin Song Lyrics In Tamil

Ezhaigalin Song Lyrics song is from the movie Thambi Durai which was released in the year 1997 and it was sung by the singers year : 1997. The lyrics of this song Ezhaigalin Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. movie : Thambi Durai have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : movie : Thambi Durai
திரைப்படம் : Thambi Durai
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1997
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1997
=================

ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா
ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

உன்னக் கும்பிடாம
இருப்பவன் சோமாரியம்மா
ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

மதுர மீனாட்சி காஞ்சி காமாட்சி
காசி விசாலாட்சி பணக்கார சாமிதான்
ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

காசு இல்லாதவன் கிட்ட வராமலே
கட்டிக் காப்பாத்துற கோயில் உண்டு
ஏழ வந்தாலுமே கூழ தந்தாலுமே
ஏற்றும் உன் கோயில்போல் எங்கே உண்டு

பெத்தெடுத்த தாயாட்டம்
குத்தம் கொற பாக்காம
பக்தருக்கு காட்சி தர
காசு பணம் கேக்காம

மக்களையே ஆதரிக்கும்
மாரியம்மன் நீதானே
மண்ணுலகம் வாழ்த்தோதும்
பெண்ணரசி பொன் மானே

ஆத்தா உன் கண்ணால
பாத்தாலே தன்னாலே
ஆனந்தம் உண்டாகும்
எல்லோர்க்கும் இந்நாளே
வேப்பிலையில் சேலைகட்டி
வீற்றிருக்கும் தேவியே

ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா
ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

உன்னக் கும்பிடாம
இருப்பவன் சோமாரியம்மா
ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

அம்மா உன் காட்சியா
இங்கே உன் சாட்சியா
கன்னிப்பெண் செண்பகம் வந்தாளம்மா
ஆத்தா உன் நாக்குதான்
கூறும் நல்வாக்குதான்
கேட்டா எந்நாளுமே சொன்னாளம்மா

நல்ல குறி நீதானே
சொல்ல வேணும் வாயாலே
நன்ம வந்து சேராதோ
காவல் நிக்கும் தாயாலே

பூச வச்ச பானையில
பொங்க வைப்போம் எல்லாரும்
மாவிளக்க நெய்ய விட்டு
ஏத்தி வைப்போம் நாள் தோறும்

பூப்பூக்கும் காடெல்லாம்
பொன்னாகும் மண்ணெல்லாம்
காப்பாத்தும் அம்மாவ
கொண்டாடும் ஊரெல்லாம்
பாம்பு என்றும் வேம்பு என்றும்
தோன்றுகின்ற மாரியே

ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா
ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

உன்னக் கும்பிடாம
இருப்பவன் சோமாரியம்மா
ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

மதுர மீனாட்சி காஞ்சி காமாட்சி
காசி விசாலாட்சி பணக்கார சாமிதான்
ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா
ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

Ezhaigalin Video Song

Ezhaigalin Song Lyrics from Thambi Durai | Ezhaigalin பாடல் வரிகள் in tamil

Leave a Comment