Raathiriyil Poothirukum Song Lyrics song is from the movie Thanga Magan (1983) which was released in the year 1983 and it was sung by the singers year : 1983. The lyrics of this song Raathiriyil Poothirukum Song Lyrics was written by Pulamaipithan and music composed by Ilaiyaraaja. movie : Thanga Magan (1983) have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Thanga Magan (1983)
திரைப்படம் : Thanga Magan (1983)
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1983
எழுத்தாளர் : Pulamaipithan
வருடம் : 1983
=================

ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ

சேலைச் சோலையே
பருவ சுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே
பருவ சுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ

வீணையெனும் மேனியிலே
தந்தியினை மீட்டும்
கை விரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

வீணையெனும் மேனியிலே
தந்தியினை மீட்டும்
கை விரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே
வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே
வந்தது போல் காட்டும்
ஜீவ நதி நெஞ்சினிலே
ஆடும் ஓடும்
மோதும் புதிய அனுபவம்

ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ

மாங்கனிகள் தொட்டிலிலே
தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற
மாலையிலே பரிமாற

மாங்கனிகள் தொட்டிலிலே
தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற
மாலையிலே பரிமாற

வாழையிலை நீர் தெளித்து
போடடி என் கண்ணே
வாழையிலை நீர் தெளித்து
போடடி என் கண்ணே
நாதசுரம் ஊதும் வரை
நெஞ்சம் இன்னும் கொஞ்சம்
பொறுமை அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ

சேலைச் சோலையே
பருவ சுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே
பருவ சுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ

Leave a Comment