Vaasa Karuvepilaiye Song Lyrics song is from the movie Sirayil Pootha Chinna Malar which was released in the year 1990 and it was sung by the singers year : 1990. The lyrics of this song Vaasa Karuvepilaiye Song Lyrics was written by Pulamaipithan and music composed by Ilaiyaraaja. movie : Sirayil Pootha Chinna Malar have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Sirayil Pootha Chinna Malar
திரைப்படம் : Sirayil Pootha Chinna Malar
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1990
எழுத்தாளர் : Pulamaipithan
வருடம் : 1990
=================

வாசக் கருவேப்பில்லையே
என் மாமன் பெத்த மல்லிகையே
வாசக் கருவேப்பில்லையே
என் அத்தை பெத்த மன்னவனே

ஊதக்குளிரு காத்து
அது ஊசி குத்துற போது
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு
ஊதக்குளிரு காத்து
அது ஊசி குத்துற போது
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு

வாசக் கருவேப்பில்லையே
என் மாமன் பெத்த மல்லிகையே

நிலவு சேலை கட்டி நடக்குது பொண்ணா
உலக அதிசயத்தில் இப்படி ஒண்ணா
நடந்தா தென்மதுரை பாண்டியன் போல
நழுவுது பார்த்ததுமே இடுப்பில சேலை

நன்றி கெட்ட சேலை
அது வேணா விட்டுருடி
கண்ணே உந்தன் சேலை
இனி நான்தான் கட்டிக்கடி

எட்டி நில்லு சாமி
நீ தொட்ட ஒட்டிகுவேன்
தொட்டில் ஒன்னு போடா
ஒரு தோது பண்ணிக்குவேன்

இப்போதே அம்மாவா நீ ஆனா
என் பாடு என்னாகும் வாம்மா

வாசக் கருவேப்பில்லையே
என் அத்தை பெத்த மன்னவனே

ஒடம்போ தங்கத்தில வார்த்தது போல
உதடும் முள்முருங்க பூத்தது போல
கருப்பு வைரத்தில செஞ்சது தேகம்
கண்டதும் இளசுகெல்லாம் வந்திடும் மோகம்

எந்த பொண்ணு கையும்
என்னை இன்னும் தொட்டதில்ல
இன்று மட்டும் கண்ணே
நம்ம கற்பும் கெட்டதில்ல

கற்பு உள்ள ராசா
நான் உன்ன மெச்சிக்குறேன்
கட்டிகையா தாலி
உன்ன நல்ல வச்சுகிறேன்

கல்யாணம் கச்சேரி ஊர்கோலம்
கையோடு கை சேர்த்து போவோம்

வாசக் கருவேப்பில்லையே
என் அத்தை பெத்த மன்னவனே
வாசக் கருவேப்பில்லையே
என் மாமன் பெத்த மல்லிகையே

ஊதக்குளிரு காத்து
அது ஊசி குத்துற போது
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு
ஊதக்குளிரு காத்து
அது ஊசி குத்துற போது
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு

வாசக் கருவேப்பில்லையே
என் அத்தை பெத்த மன்னவனே

Leave a Comment