இந்த ஆன்மீக பதிவில் (அடித்தாலும் நீ அணைத்தாலும் நீ) – Adithaalum Nee Anaithaalum Nee பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… அடித்தாலும் நீ அணைத்தாலும் நீ ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

அடித்தாலும் நீ அணைத்தாலும் நீ முத்தான‌ முருகன் பாடல் — சுந்தராம்பாள் அம்மாவின் குரல். Adithaalum Nee Anaithaalum Nee – Murugan Devotional Song lyrics by Smt. K.B. SUNDARAMBAL

அடித்தாலும் நீ

அணைத்தாலும் நீ – என்னை

அடித்தாலும் நீ

அணைத்தாலும் நீ – உன்னைக்

கூறுவார் சிறப்புக்குக்

குவலயம் நீ

அடித்தாலும் நீ – என்னை

அணைத்தாலும் நீ

கடுக்க நிற்கும் ஏழை – கால்

கடுக்க நிற்கும் ஏழை – சன்னிதியில் கால்

கடுக்க நிற்கும் ஏழை – முருகா!

உன் சன்னிதியில் கால்

கடுக்க நிற்கும் இந்த ஏழை

கடுக்க நிற்கும் ஏழை – என்

இடுக்கண் கலையாமல்

கடுக்க நிற்கும் ஏழை – என்

இடுக்கண் கலையாமல்

படுத்தாத பாடல்லாம்

படுத்துகிறாய் ஐயா!

அடித்தாலும் நீ

அணைத்தாலும் நீ…

தொடுக்கும் மலர்கள் பல தூய மனத்தோடே தொடுத்தேன் -நின்பாதம்

அடுத்தேன் தொடுக்கும் மலர்கள் பல தூய மனத்தோடே தொடுத்தேன் நின்பாதம் அடுத்தேன் – என்னைத்

தடுத்தே ஆட்கொள்ளாமல் – முருகா! –

என்னைத் தடுத்தே ஆட்கொள்ளாமல் தரணியில் – என்னைத்

தடுத்தே ஆட்கொள்ளாமல் – தரணியில் எனைத் தனியே

விடுத்தால் இனி என்செய்வேன்

வேதனை இனி தாளேன்

தடுத்தே ஆட்கொள்ளாமல் தரணியில் எனைத் தனியே விடுத்தால் என்செய்வேன் வேதனை இனி தாளேன்

அடித்தாலும் நீ

அணைத்தாலும் நீ – உன்னைக்

கூறுவார் சிறப்புக்குக்

குவலயம் நீ

அடித்தாலும் நீ – என்னை

அணைத்தாலும் நீ

(adithaalum nee anaithaalum nee) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs. You can also save this post அடித்தாலும் நீ அணைத்தாலும் நீ or bookmark it. Share it with your friends…

Leave a Comment