இந்த ஆன்மீக பதிவில் (உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை) – Unai padum thozhil antri veru illai Muruga Murugan Song Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை, சௌந்தர்ராஜன் முருகன் பாடல் வரிகள். Unai padum thozhil antri veru illai Muruga Song Lyrics,TM Soundarrajan Tamil Devotional Song.

============

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை

எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை

எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

முருகா முருகா

கற்பனையில் வருகின்ற சொற்பதமே

அன்பு கருணையில் உருவான அற்புதமே

கற்பனையில் வருகின்ற சொற்பதமே

அன்பு கருணையில் உருவான அற்புதமே

சிற்பச்சிலையாக நிற்பவனே

சிற்பச்சிலையாக நிற்பவனே

வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே

முருகா முருகா

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை

எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

அமுதம் இருக்கின்ற பொற்குடமே

இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே

அமுதம் இருக்கின்ற பொற்குடமே

இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே

குமுத இதழ் விரிந்த பூச்சரமே

குமுத இதழ் விரிந்த பூச்சரமே

உந்தன் குறுநகை தமிழுக்கு திருவரமே

முருகா முருகா

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை

எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை

எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

முருகா முருகா முருகா முருகா

(unai padum thozhil antri veru illai) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs. You can also save this post உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை or bookmark it. Share it with your friends…

Leave a Comment